Tuesday, April 24, 2012

எழுந்த நேரம் 0243 PM 24 april 2012

கனவு பாகம் 1:
நான் எங்கேயோ வெளியூரில் இருக்கின்றேன் எனக்கு என் பெரியம்மா மகன் மாரியப்பன் போன் செய்து எதோ கல்யாண நிகழ்ச்சி இருப்பதாகவும் அதற்கு  போடோக்ராபர் மற்றும் வீடியோ எடுக்க என்னை கேட்கின்றான்.  நான் என்னிடம் பிளாஷ் இல்லாததனால், நான் வேண்டுமானால் போட்டோ மட்டும் எடுக்கின்றேன் என்று சொல்கிறேன். அதற்கு ஓகே சொன்னான் அவன்.
கனவு பாகம்  2:
நான் வீட்டில் இருக்கின்றேன். நல்ல மழை வேறு, எங்கள் அப்பாவின் tvs xl  வெளியில் நிற்கின்றது. மழை என்பதால் வீதியில் இருக்கும் அதனை எடுத்து வீட்டுதிண்ணையில் நிறுத்த முயற்சி செய்கின்றேன். அதே சமயம் எனது அப்பா, சித்தப்பா ரவி எல்லோரும் வீட்டுக்குள் சாப்பிட்டு கொண்டிருக்ன்றார்கள். எதோ நல்ல ஒரு பாட்டு ரேடியோவில் ஒலிபரப்பாகி கொண்டிருகின்றது. ஆனால் எனது தங்கைக்கு பிடிக்காததால், அதனை மாற்ற முயற்சி செய்கின்றாள். அதனை என் அப்பா தடுக்கின்றார். அந்த நேரம் என் அண்ணன் போன் செய்து அவன் வீட்டில் போட்டோ எடுபதற்காக சொன்ன நிகழ்சிக்கு அட்வான்ஸ் வாங்கி கொள்ளுமாறு சொன்னான் நானும் ஓகே சொல்லி விட்டு அவன் வீட்டிற்கு சென்றேன் அங்கே ரூ 3000 பணம் கொடுத்த அவன் வீட்டில் repair ஆனா plug point ஐ சரிசெய்ய்மாறு என்னை கேட்கிறான். நானும் அதனை டெஸ்ட் செய் கின்றேன். அதனை போட்டுவிட்டு,    வீட்டுக்கு கிளம்பினேன் அவன் மறுபடி என்ன நினைத்தானோ தெரியவில்லை மீண்டும் ரூ 1000 கொடுத்தான்.
கனவு பாகம் 3:
ஏதோ வெளியூர், என்ன ஊரென்று தெரியவில்லை. நானும் என் நண்பனும் எதோ ஒரு நடிகரின் படத்தை தியேட்டரில் பார்த்துவிட்டு வெளியில் வருகின்றோம். அப்பொழுது எங்கள் ஊரில் உள்ள லதிப் மற்றும் அவனது நண்பனை சந்திகின்றோம் பின்பு நால்வரும் எங்காவது  சாப்பிடலாம் வாருங்கள் என்று சொல்லி அவர்களை உணவகம் இருக்கும் தெருக்களுக்கு அழைத்து சென்றேன் அப்பொழுது லதிப் அவர்களின் நண்பன் ஒரு சுவையில்லாத உணவகத்தில் சாப்பிட நுழைந்து பிரியாணி ஆர்டர் செய்கின்றான். அனால் அந்த உணவகம் நன்றாக இல்லை என்பதை மனத்தில்கொண்ட லதிப் வேருகடைக்கு  எங்களை அழைத்து செல்ல முயல்கின்றான்.
 கனவு பாகம் 4:
 எதோ ஒரு தீவில் இன்னும் நன்றாக சொன்னால் நடுகடலில் ஒரு மேடு.  நானும் என் நண்பனும் இருகின்றோம். அங்கே சில பெண்களும் ஆண்களும் விளையாடி கொடிருகின்றார்கள். அதில் நான்கு பெண்கள் ஒரே இடத்தில உக்கார்ந்து மற்றவர்களை வம்பிழுத்து கொண்டிருதார்கள். நான் அவர்கள் அருகே சென்று ஒரு பெண்ணிடம் ஹாய் சொல்லி முடிபதற்குள், அவள் என் பின்னல் பார்த்து  சொன்னால், அங்கே பாருங்கள் சுனாமி வருகின்றது என்று. திரும்பி பார்த்தல் ஆணை அலைகள் வேகமாக வந்து எங்களை எல்லாம் அள்ளிக்கொண்டு போய் கடலுக்குள் தள்ளியது. தண்ணீரில் மூழ்கி எழுந்த நான் எல்லோருக்கும் கையில் சிக்கிய வலையை போட்டு, பிடித்து கொள்ளுமாறு தூக்கி எறிந்தேன் எல்லோரும் அதனை பிடித்துகொண்டார்கள் பின்பு மறுபடியும் தண்ணீர் குறைந்தவுடன் மேட்டிற்கு சென்றோம். அங்கே ஓடிவந்த அவள் எனக்கு சிரித்துகொண்டே நன்றி சொன்னால் ஆனால் எனக்கு அவள் முகம்தான் ஞாபகமில்லை.